இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தோனி தற்போது ஜிம்பாப்வேயில் அந்நாட்டுக்கு எதிரான குறுகிய வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ஜிம்பாப்வே போலீஸாரின் பைக்கை ஓட்டி அசத்தியுள்ளார்.
தோனி பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்வதை அதிகம் விரும்பக்கூடியவர். நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது சொந்த ஊரான ராஞ்சி நகரில் பைக்கில் சுற்றுவார். வீட்டிலும் பல ரக பைக்குகள் வைத் துள்ளார்.
இந்நிலையில் ஜிம்பாப்வேயில் இருக்கும் தோனி அந்நாட்டு போலீஸார் ஒருவரிடம் பைக்கை வாங்கி ஓட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த பைக்கானது 'ஹவாஸாகி கான்கார்ஸ் 14 ஏபிஎஸ்' வகையை சேர்ந்தது. 1,352 சிசி திறன் கொண்ட இந்த வகை பைக்குகளை ஆப்ரிக்க நாடுகளில், போலீஸார் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
உலகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
6 hours ago