சச்சின் சுயசரிதையில் கருத்து: சர்ச்சையைத் தவிர்த்த கபில்

By பிடிஐ

சச்சின் தனது சுயசரிதையில் பயிற்சியாளராக கபில்தேவ் ஏமாற்றமளித்தார் என்று கூறியது அவரது சொந்தக் கருத்து என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

"அது அவரது சொந்தக் கருத்து, ஒவ்வொருவருக்கும் அவரது கருத்தைக் கூற உரிமை இருக்கிறது. நான் அனைவரது கருத்தையும் மதிக்கக்கூடியவன். அவரது நூலுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் கபில்தேவ்.

சச்சின் தனது சுயசரிதையான பிளேயிங் இட் மை வே-யில் ஆஸ்திரேலியா பயணத்தின் போது தான் கேப்டனாக இருந்த சமயத்தில் பயிற்சியாளராக இருந்த கபில்தேவ் அணியின் உத்திகள் பற்றிய விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது ஏமாற்றமளித்தது என்று கூறியிருந்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வாய்ப்பு பற்றி கபில் கூறும்போது, “நான் எந்த வித முடிவுகளுக்கும் தாவ விரும்பவில்லை. நம் அணியை வாழ்த்துகிறேன். அவர்கள் அங்கு சென்று நல்ல கிரிக்கெட்டை ஆடுவார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

சினிமா

26 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

59 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்