சேலஞ்சர் ஸ்குவாஷ் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஜேஎஸ்டபிள்யூ-டபிள்யூஎஸ்ஏ சேலஞ்சர் சர்க்கியூட் ஸ்குவாஷ் போட்டியின் கடைசி சுற்று சென்னையில் இன்று தொடங்குகிறது. 29-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இது தொடர்பாக இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளன பயிற்சியாளர் மேஜர் எஸ்.மணியம் உள்ளிட்டோர் கூறியதாவது:

சேலஞ்சர் சர்க்கியூட் போட்டியின் முந்தைய சுற்றுகள் ஜெய்ப்பூர் மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில் கடைசி சுற்று சென்னையில் நடைபெறுகிறது. மும்பையில் நடைபெற்ற 2-வது சுற்றில் பங்கேற்ற மகேஷ், சென்னை போட்டியில் பங்கேற்கவில்லை. ஹரிந்தர்பால், குஷ் குமார், செந்தில் குமார், ரவி தீட்சித் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். மகளிர் பிரிவில் இந்திய அணிக்கு தீபிகா பலிக்கல் தலைமை தாங்குகிறார்.

இதுதவிர தேசிய அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகின்றன. இதில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 540 பேர் பங்கேற்கிறார்கள். 11, 13, 15, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

17 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

26 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்