ஜேஎஸ்டபிள்யூ-டபிள்யூஎஸ்ஏ சேலஞ்சர் சர்க்கியூட் ஸ்குவாஷ் போட்டியின் கடைசி சுற்று சென்னையில் இன்று தொடங்குகிறது. 29-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இது தொடர்பாக இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளன பயிற்சியாளர் மேஜர் எஸ்.மணியம் உள்ளிட்டோர் கூறியதாவது:
சேலஞ்சர் சர்க்கியூட் போட்டியின் முந்தைய சுற்றுகள் ஜெய்ப்பூர் மற்றும் மும்பையில் நடைபெற்ற நிலையில் கடைசி சுற்று சென்னையில் நடைபெறுகிறது. மும்பையில் நடைபெற்ற 2-வது சுற்றில் பங்கேற்ற மகேஷ், சென்னை போட்டியில் பங்கேற்கவில்லை. ஹரிந்தர்பால், குஷ் குமார், செந்தில் குமார், ரவி தீட்சித் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். மகளிர் பிரிவில் இந்திய அணிக்கு தீபிகா பலிக்கல் தலைமை தாங்குகிறார்.
இதுதவிர தேசிய அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் வரும் 27-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகின்றன. இதில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 540 பேர் பங்கேற்கிறார்கள். 11, 13, 15, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
இந்தியா
17 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
26 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago