சிபிஎஸ்இ கால்பந்து: வேலம்மாள் பள்ளி சாம்பியன்

By செய்திப்பிரிவு

சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி. சீனியர் செகன்டரி பள்ளி நடத்திய சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் வேலம்மாள் இண்டர்நேஷனல் பள்ளி சாம்பியன் ஆனது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 59 பள்ளிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியின் முதல் அரையிறுதியில் ஒமேகா இண்டர்நேஷனல் பள்ளி 4-2 என்ற கோல் கணக்கில் செயின்ட் ஜோசப் உறைவிடப் பள்ளி அணியையும், வேலம்மாள் இண்டர்நேஷனல் பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில் ராணுவ பொதுப் பள்ளி அணியையும் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியில் வேலம்மாள் இண்டர்நேஷனல் பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் ஒமேகா இண்டர்நேஷனல் பள்ளி அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் செயின்ட் ஜோசப் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ராணுவ பொதுப் பள்ளி அணியைத் தோற்கடித்தது. சிறந்த வீரராக செயின்ட் ஜோசப் அணியின் கோலாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

பரிசளிப்பு விழாவில் முன்னாள் இந்திய வீரரும், சந்தோஷ் டிராபி பயிற்சியாளருமான ரஞ்சித் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை பி.எஸ்.பி.பி. பள்ளியும், சென்னை யுனைடெட் எப்.சி.யும் செய்திருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்