இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனிலும் மிட்பீல்டர் புருனோ பெலிசாரியை தக்கவைத்துக் கொண்டுள்ளது சென்னையின் எப்.சி. அணி.
22 வயதான புருனோ, பிரேசில் கால்பந்து கிளப்பான அட்லெடிகோ பாரானென்ஸில் விளையாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல்முறையாக நடைபெற்ற ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எப்.சி. அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். கடந்த சீசனில் சென்னையின் எப்.சி. வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த புருனோ, 4 கோல்களையும் அடித்தார்.
இது தொடர்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புருனோவை 2-வது சீசனுக்கு தக்கவைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் திறமையான வீரர். கடந்த சீசனில் தனது திறமையை அவர் பலமுறை வெளிக்காட்டினார்.
முக்கியமான ஆட்டங்களில் அதிசயம் நிகழ்த்தினார். அவருடைய வருகை எங்கள் அணியின் நடுகளத்துக்கு பலம் சேர்க்கிறது. இந்த முறை அவர் இன்னும் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக புருனோ கூறியிருப்பதாவது: இந்தியாவில் மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பளித்த சென்னை அணிக்கு நன்றி. கடந்த சீசனில் பங்கேற்றபோது களத்திலும் சரி, களத்துக்கு வெளியிலும் சரி நல்ல அனுபவம் கிடைத்தது.
கடந்த சீசனில் சென்னையில் விளை யாடியபோது அங்குள்ள ரசிகர் களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசித்து விளையாடினோம். இந்த முறை சென்னை அணியை ஐஎஸ்எல் சாம்பியனாக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
இந்தியா
10 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
30 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago