சீன ஓபன்: சானியா மிர்சா - காரா பிளாக் இணை சாம்பியன்!

By செய்திப்பிரிவு

சீன ஓபன் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்றது, இந்தியாவின் சானியா மிர்சா - ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று (சனிக்கிழமை) நடந்து முடிந்த இறுதிச் சுற்றில், சானியா இணை 6-2, 6-2 என்ற நேர் செட்களில், ரஷிய - ஸ்பெயின் ஜோடியான வேரா துஷேவினா - அரான்ட்ஸ்கா பர்ரா சான்டோன்ஜா இணையை வீழ்த்தியது.

இந்த சீசனில், சானியா மிர்சா கைப்பற்றியிருப்பது இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் அரையிறுதியில் சானியா - காரா பிளாக் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை ஜோடியான இத்தாலியின் சாரா எர்ரானி - ராபர்ட்டா வின்ஸி ஜோடிக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 mins ago

தமிழகம்

51 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்