என் குழந்தைகள் என்னவாக விரும்புகிறார்களோ அதுவே என் விருப்பம். என் ஆசைகளை அவர்கள் மீது திணிக்க மாட்டேன் என்று பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சச்சினின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப் படம் நாளை(வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டென்டுல்கர்,
“எனது தந்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் விரும்பிய விளையாட்டை விளையாட எனக்கு அனுமதி அளித்தார். நானும் இப்படி வருவோம், அப்படி வருவோம் என்ற எதிர்பார்ப்பு எல்லாம் வைத்துக் கொள்ளாமல் விளையாடினேன். அதனால் தான் என்னால் சாதிக்க முடிந்தது. வாழ்க்கையில் குறுக்கு வழியில் மிக எளிதாக முன்னேறி விடலாம் ஆனால் அந்த வெற்றி நிலைக்காது.
என் குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் விரும்பிய துறையில் செல்ல அவர்களுக்கான முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். என் ஆசைகள் எதையும் அவர்கள் மீது நான் திணிப்பதில்லை. என்னைப் பற்றிய ஆவணத் திரைப்படம் மூலம் நான் சொல்ல விரும்பும் செய்தியும் இதுவே குழந்தைகள் மீது பெற்றோர்கள் ஆசையை திணிப்பதற்கு பதிலாக அவர்கள் விருப்பத்திற்கு உறுதுணையாக நின்றாலே போதும்…. " என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago