ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

By செய்திப்பிரிவு

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடிலெய்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான லிங்கர் 62 ரன்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 53 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து 188 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 18 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக முனவீரா 37 ரன்கள் எடுத்தார். பாக்னர், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்ததன் மூலம் இலங்கை அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

17 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

11 hours ago

மேலும்