ஓவல் டெஸ்ட் போட்டியில் ராகுல், ரிஷப் பந்த் கூட்டணி மூலம் இந்திய அணிக்குப் புதிய நம்பிக்கைப் பிறந்துள்ளது. 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆடி வருகிறது.
கே.எல்.ராகுல் 19 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 140 ரன்களுடனும் ரிஷப் பந்த் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 104 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.
இருவரும் சேர்ந்து 150 ரன்கள் கூட்டணி அமைத்துள்ளனர். 39 ஓவர்களில் 194 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு லேசாக உதறல் எடுக்கத் தொடங்கியுள்ளது. புதிய பந்துக்கு இன்னும் 12 ஓவர்கள் இருப்பதால் இடைப்பட்ட ஓவர்களில் 45-50 ரன்களை எடுக்க முடிந்தால் இங்கிலாந்து அச்சம் இன்னும் அதிகரிக்கும்.
சாத்தியமில்லாததை நோக்கிய முயற்சியில் ராகுல், பந்த் சிறப்பாக ஆடி வருகின்றனர். ரிஷப் பந்த் பந்துகளை பளார் பளார் என்று சக்தி வாய்ந்த ஷாட்களாக ஆடி வருகிறார். இருவரும் சேர்ந்து 192 பந்துகளில் 153 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்தை தோல்வி அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago