சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி காந்த் ஆகியோர் கால் இறுதியில் தோல்வியடைந்தனர்.
சீனாவின் சாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 7-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், 3-ம் நிலை வீரரும் உலக சாம்பியனுமான ஜப்பானின் கென்டோ மோமோடாவை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கென்டோ 21-9, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆண்டில் கென்டோ மோமோடாவிடம், காந்த் 3-வது முறையாக தோல்வி கண்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மலேசிய ஓபன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற்ற இந்தோனே ஷிய ஓபன் தொடர்களிலும் காந்த்தை, கென்டோ மோமோடா வீழ்த்தியிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 3-ம் நிலை வீராங்கனை யான இந்தியாவின் பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான சீனா வின் சென் யூபியை எதிர்த்து விளை யாடினார். இதில் சிந்து 11-21, 21-11, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
6 hours ago