இன்று வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா இலங்கை செல்கிறார், அங்கு தன் மாமியார் இறந்ததையடுத்து இறுதிச் சடங்கை முடித்துக் கொண்டு மீண்டும் உலகக்கோப்பைத் திரும்புகிறார்.
“லஷித் மலிங்கா இலங்கை, வங்கதேச உலகக்கோப்பைப் போட்டிக்குப் பிறகு இலங்கை செல்கிறார், ஏனெனில் அவரது மாமியார் இறந்து விட்டார். அவர் 15ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கூ எதிரான போட்டியில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்டிப்பில் அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 201 ரன்களை வெற்றிகரமாக தடுத்ததில் மலிங்காவின் 3/39 பவுலிங் ஸ்பெல் முக்கியப் பங்கு வகித்தது. இலங்கை அணி 3 போட்டிகளில் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
முன்னதாக நியூஸிலாந்துடன் இலங்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியதை அடுத்து மலிங்கா அணி வீரர்களுக்கு தோல்வி குறித்த பயம் இல்லை, தோல்வி குறித்த வெட்கம் இல்லை என்று கடுமையாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago