வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் தன் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிவுறுத்தும் விதமாக விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கிளப் மட்ட டி20 கிரிக்கெட்டில் 20 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.
காலிகட் மைதானத்தில் மோகன் பகான் அணிக்கு ஆடிய விருத்திமான் சஹா, பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணிக்காக ஜேசி முகர்ஜி டிராபி கிளப் மட்ட டி20 தொடரில் 20 பந்துகளில் 102 ரன்களை விளாசித்தள்ளினார், இதில் 14 சிக்சர்கள் அடங்கும்.
102 ரன்களில் 14 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் 2 சிங்கிள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளாசல் மூலம் 7 ஓவர்களில் வெற்றி இலக்கு 152 ரன்கள் எட்டப்பட்டது. மிதவேகப்பந்து வீச்சாளர் அமன் புரோசாத்தை ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தார். இந்த ஓவரில் 37 ரன்கள் வந்தது, ஒரு ரன் வைடு மூலம் வந்தது. கடைசி சிக்ஸ் மூலம் சதம் கடந்தார்.
குறைந்த ஓவர் போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கி கலக்க விரும்பும் சஹா, ஆட்டம் முடிந்து கூறும்போது, “முதல் பந்திலிருந்தே நன்றாக மிடில் செய்ய முடியும் என்று உணர்ந்தேன், அப்படியே செய்தேன். இது சாதனையா என்று தெரியவில்லை, ஐபிஎல் கிரிக்கெட்டை எதிர்நோக்குகிறேன், பல்வேறுவி
காலிகட் மைதானம் கொஞ்சம் நல்ல அளவு உள்ளதுதான், எதிரணியும் ஓரளவுக்கு டீசண்டான முதல் டிவிஷன் அணிதான்.
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று முத்திரைக் குத்தப்பட்ட விருத்திமான் சஹா 2014 ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக பெங்களூரில் அதிரடி சதம் அடித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 30 பந்துகளில் சதம் கண்டு கிறிஸ் கெய்ல் அதிகாரபூர்வ தொடரில் டி20 சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
ஓடிடி களம்
32 mins ago
தமிழகம்
11 mins ago
வணிகம்
44 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
14 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago