மகளிர் ஹாக்கியில் தென் கொரியா அணிக்கு எதிரான 4-வது ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் நேற்று சியோலில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குர்ஜித் கவுர், தீபிகா, பூணம் ராணி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தென் கொரிய அணி தரப்பில் மி ஹைன் பார்க் ஒரு கோல் அடித்தார். இந்த வெற்றியால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றியது. கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
7 hours ago