இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், ஷமி மீது பல புகார்களை கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் பல பதிவுகளை இட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஹசின் ஜகான் கூறும்போது, “ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைபடுத்துக்கின்றனர். அவரது தாயார், சகோதரர் என அனைவரும் என்னை தவறாக பேசுகின்றனர். தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா வந்தபிறகும் ஷமி என்னை தாக்கினார். அவரது குடும்பம் என்னை கொல்ல முயற்சிக்கிறது. நான் ஷமியின் தவறை திருத்திக் கொள்ள நிறைய நேரம் அளித்துவிட்டேன். நான் எனது குடும்பத்துக்காகவும், குழந்தைகாகவும் பொறுத்துக் கொண்டேன். ஆனால் அவர் என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார். என்னால் இனியும் அவரை பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக சட்டரீதியாக புகார் அளிக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து ஷமி தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
க்ரைம்
4 mins ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago