இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலககக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.
டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஐசிசி ஒரு ஆண்டு தடை விதித்தது. தற்போது தடை முடிந்த நிலையில் அவர்கள் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து நேற்று பிரிஸ்பேனில் மேக்ஸ்வெல் கூறியதாவது:வரும் உலகக் கோப்பை மிகச் சிறந்த ஒரு போட்டியாக அனைத்து அணிகளுக்குமே அமையும். ஸ்மித்தும், டேவிட் வார்னரும் ஐபிஎல் போட்டியில் விளையாடி விட்டு சமீபத்தில்தான் நாடு திரும்பினர். அவர்கள் அணியில் இணைந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவுடன் உள்ளனர். ஆனால் உலகக் கோப்பையில் விளையாட அவர்கள் விரைவில் உடல் தகுதியைப் பெற்றுவிடுவர். உலகக் கோப்பையில் அவர்கள் தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். இதற்கு ஐபிஎல் போட்டி அனுபவம் அவர்களுக்கு உதவும். வார்னர் 12 போட்டிகளில் விளையாடி 692 ரன்கள் குவித்தார். இவ்வாறு அவர் கூறினார்..
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தொழில்நுட்பம்
10 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
48 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago