ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான சீசனில் தங்களது கடைசிப் போட்டியை ஆர்சிபி அணி எதிர்கொள்ள உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் டீவில்லியர்ஸ் ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
ஆர்பிசிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாத நிலையில் இன்று தனது கடைசி லிக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆர்பிசி அணியின் கேப்டன் கோலி மற்றும் டீவில்லியர்ஸ் இருவரும் ரசிகர்கள் தங்களுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்பி அணி தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளது.
அதில் டீவில்லியர்ஸ் பேசும்போது, ''ஆர்சிபி ரசிகர்களுக்கு...நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. இந்த சீசனில் எங்களது ஆட்டம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்'' என்றார்.
கேப்டன் கோலி பேசும்போது, ''இந்த சீசனில் கடைசிப் போட்டி. நிச்சயம் இந்த சீசன் எங்களுக்கு ஏமாற்றமான ஒன்றுதான். உங்களுக்கும்.
3 மணி நேரப் போட்டி முடிந்த பிறகு நீங்கள் மைதானத்தில் அமர்ந்திருந்து எங்களை உற்சாகப்படுத்துவீர்கள். அது எப்போது எங்களுக்கு சிறப்பான அனுபவமாகும். நீங்கள்தான் ஐபிஎல்லின் சிறந்த ரசிகர்கள்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago