கோலிக்கு ஓய்வு கொடுங்கள்: இந்திய அணிக்கு மைக்கேல் வாகன் யோசனை

By செய்திப்பிரிவு

வரவிருக்கும் உலகக் கோப்பைக்காக இப்போதே கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

ஐபில் டி20 கிரிக்கெட் தொடர் 12வது சீஸன் கடந்த மார்ச் 23 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடக்கத்திலிருந்தே விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி மோசமாகவே விளையாடி வருகிறது. இதுவரை விளையாடி உள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் பெங்களூரு அணியின் செயல்திறன் ஏமாற்றமாகவே உள்ளது. அதிலும் வெற்றிக்கான 11 பேர் கொண்ட அணிச்சேர்க்கையை தேடி கண்டறிவது என்பதே அந்த அணிக்கு கடும் சவாலாக மாறியுள்ளது.

அதிலும் விராட் கோலியின் ஃபார்ம், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது தரநிலைக்கு தகுந்த அளவில் இல்லாதது பலவீனமாக மாறியுள்ளது. பெங்களூரு அணியின் தொடர் தோல்விகள் கோலியின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம், இந்த பாதிப்பு உலகக் கோப்பையில்  இந்திய அணியின் ஆட்டத்தில் எதிரொலிக்க வாய்ப்புகள் உள்ளன என்று என்று சில கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்தியா சமயோஜிதமாக திட்டமிட்டு, வரவிருக்கும் உலகக் கோப்பைக்காக இப்போதே கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உலகக் கோப்பை என்பது பெரிய போட்டி என்பதால் அதற்கு முன்பாக, அவருக்கு ஓய்வு தர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதற்கு கோலி ரசிகர்கள் மைக்கேல் வாகனுக்கு கடுமையான முறையில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்