ஐபிஎல் 2019: வர்ணனையாளராக மீண்டும் களமிறங்கினார் ஆர்.ஜே.பாலாஜி

By செய்திப்பிரிவு

சென்னையில் தொடங்கியுள்ள ஐபிஎல் 2019 போட்டியில், மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், மயில்சாமி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எல்.கே.ஜி’. வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, நாயகனாகவும் நடித்தார் ஆர்.ஜே.பாலாஜி.

வானொலி வர்ணனையாளராகத் தொடங்கியவர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக உயர்ந்தார். தற்போது நாயகனாக அறிமுகமானதால், கிரிக்கெட் வர்ணனையாளராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது.

தற்போது இன்று (மார்ச் 23) தொடங்கியுள்ள ஐபிஎல் 2019 போட்டிகளில் தான் வர்ணனையாளராக இணைந்துள்ளதாக, தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. அடுத்த 2 மாதங்ளுக்கு இதில் தான் கவனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2018-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது எழுந்த சர்ச்சையினால் அதன் வர்ணனைப் பொறுப்பிலிருந்து விலகினார். இந்தாண்டு மீண்டும் தன் வர்ணனையாளர் பொறுப்புக்கு மீண்டும் ஆர்.ஜே.பாலாஜி திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்