சென்னையில் ஐபிஎல் போட்டி: சிஎஸ்கே ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை வரும் 16-ம் தேதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

12-வது ஐபிஎல் போட்டியில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 23-ம் தேதி நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே), பெங்களூரு ராயல்ஸ் அணிகள் இடையிலான  முதல் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.

12-வது ஐபிஎல் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

 இந்த முறை மக்களவைத் தேர்தல் நடப்பதால், முன்கூட்டியே ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. தேர்தலையொட்டி வெளிநாட்டில் போட்டிகள் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து போட்டிகளும் உள்நாட்டில் நடத்தப்படுகிறது.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டம் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை 16-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை காலை 11.30 மணிக்கு தொடங்கும். டிக்கெட்டுகள் மொத்தம் விற்பனை ஆகும் வரை இது தொடரும்.சென்னை அணியின் உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்பனையை இன்புக்மை ஷோ.காம் நிறுவனம் கையாள்கிறது.

டிஎன்சிஏ மூலம் கவுண்டர் டிக்கெட் விற்பனையும் 11.30 மணிக்கு தொடங்கும். மீதமுள்ள சிஎஸ்கே உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
சி, டி மற்றும் இ கீழ்பகுதி-ரூ.1300, சி மற்றும் இ-மேல் பகுதி ரூ.2500, விருந்தினர் டிக்கெட்டுகள்-ரூ.5000, ரூ. 6,500   விலையில் விற்பனையாகிறது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்