கடைசி 2 போட்டிகளிலிருந்து தோனிக்கு ஓய்வு: ரிஷப் பந்த் கீப்பர்

By செய்திப்பிரிவு

உலகக்கோப்பைக்கு முன்னர் நேற்று தோனி ராஞ்சியில் ஆடியதுதான் அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். ஏனெனில் கடைசி 2 போட்டிகளுக்கு தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என்று சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

 

விராட் கோலியும், அதிசயமாக, ‘2 புதுமுகங்கள் அணிக்கு வருகிறார்கள்’ என்று பீடிகை போட்டுள்ளார்.

 

மொஹாலியில் மார்ச் 10ம் தேதியும் டெல்லியில் மார்ச் 13ம் தேதியும் நடைபெறும் இருபோட்டிகளில் தோனி ரசிகர்கள் தோனியைப் பார்க்க முடியாது. அதே போல் லேசாகக் காயம்பட்ட மொகமது ஷமி மொஹாலி போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

 

ஷமி உடல்தகுதி பெறவில்லை எனில் புவனேஷ்வர் குமார் அணிக்குத் திரும்புவார்.

 

விராட் கோலியும் நேற்று கூறும்போது, “ஓரிரு புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். அவர்கள் கிடைக்கும் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் உலகக்கோப்பை நெருங்குகிறது, அந்த விமானத்தில் ஏற அனைவருக்கும் ஆவல் இருக்கும்.

 

ரிஷப் பந்த்திற்கு கேப்டன், அணித்தேர்வுக்குழுவினர் பயிற்சியாளர் தரப்பு கொடுக்கும் ஆதரவைப் பார்த்தால் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் விமானத்தில் ஏற வாய்ப்பு அரிதே என்று சூசகமாகப் புரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

54 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்