தோனிக்கு கேதார் ஜாதவ் புகழாரம்

By பிடிஐ

களத்தில் ஒரு புறம் எம்.எஸ். தோனி இருக்கும்போது மறுமுனையில் இருக்கும் வீரருக்கு கவலை தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாதில் நேற்று முன்தினம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் கேதார் ஜாதவ் 81 ரன்களும், எம்.எஸ். தோனி 59 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற கேதர் ஜாதவ் கூறியதாவது: ஆஸ்திரேலியாவிலும் சமீபத்தில் இதுபோன்ற போட்டி ஒன்றில் சேஸிங் செய்தோம். மறுமுனையில் தோனி இருக்கும்போது இந்த முனையில் இருக்கும் வீரர் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். மிடில் ஆர்டர்களில் ஆட்டத்தை கணித்து விளையாட முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை விட சிறந்தவர் யாரும் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம். நீங்கள் களத்தில் எதிர்ப்புறம் இருந்து எனக்கு தைரியம் கொடுத்தாலே போதும். நான் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்று தோனியிடம் நான் தெரிவித்தேன். அவரும் எனக்கு ஊக்கம் தந்தார். நான் எப்போதும் புதுமையான ஷாட்களை விளையாட விரும்புகிறேன். அதே நேரத்தில் பல இக்கட்டான நேரங்களில் ரிஸ்க் எடுத்து விளையாடவும் விரும்புகிறேன். கடந்த சில ஆட்டங்களில் நான் மேம்பட்டிருப்பதாக உணர்கிறேன். எனது ஆட்டத்திறனும் மேம்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்