ஆஸ்திரேலியாவில் முதல் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்: ரிஷப் பந்த்துக்கு நெட்டிசன்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

விக்கெட் கீப்பரராக  ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் அடிக்கும் 2-வது சதம் இது.மேலும், ஆஸ்திரேலியாவில்  இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடிக்கும் முதல் சதம் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.  மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணி டிக்ளேர் செய்யும் வரை ஆட்டமிழக்காமல் 159 ரன்களுடன்  ரிஷப் பந்த் களத்தில் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இதற்கு முன்னர் தோனி கூட ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில்  சதம் அடித்ததில்லை என்று  ரிஷப் பந்த்துக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அவற்றுள் சில:

ஹிட்மேன்

‏பய தீயா ஆடிட்டு இருக்கான் டபுள் செஞ்சுரியே அடிக்கலாம் போல?

கவின்தமிழ்

இத்தனை வருஷமா 5th,6th down இறங்கி எப்படி ஓவர்சீஸ் செஞ்சுரி அடிக்கிறதுனு நங்கூரம் போட்டு வைச்சிருந்தோமே.. அதை இப்படி சில்லு சில்லாய் உடைச்சுட்டியேடா..

Joe Selva

ஆஸி மண்ணில் முதல் சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச?

ஆஸியோட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிட்டு இருக்காங்க, ரிஷப் பந்த் & ஜடேஜா.

மேலும், ”We’ve got Pant Rishab Pant I just don’t think you’ll understand He’ll hit you for a six He’ll babysit your kids We’ve got Rishab Pant ” என்று  சிட்னி மைதானத்தில் ரிஷப் பந்த்துக்கு இந்திய ரசிகர்கள் பாட்டு பாடியும், இசைக் கருவிகளை இசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்