ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது ‘அவர் கையை உடை’ என்றார் மைக்கேல் கிளார்க். ஜான்சன் அதனை ஆண்டர்சனுக்குச் செய்தாரோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவின் மெக்லாரனுக்குச் செய்து விட்டார்.
செவ்வாயன்று ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்க தோல்வி அடைந்த போட்டியின் போது மிட்செல் ஜான்சன் பவுன்சரில் முன்கையில் அடிபட்டு நூலிழை எலும்பு முறிவினால் மெக்லாரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பவுன்சர் ஒன்றை வீச அதை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய மெக்லாரனின் ஹெல்மெட்டை பந்து தாக்க, ஹெல்மெட்டைக் கழற்றினால் காதிலிருந்து ரத்தம் கொட்டியது.
அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மெக்லாரன் அந்தத் தொடரை தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.
இப்போது கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கிட்டத் தட்ட அதே பவுன்சர்தான், ஆனால் ஹராரே பிட்ச் அவ்வளவு வேகம் இல்லாததால் ஜான்சனின் பவுன்சர் அவர் முன்கையைப் பதம் பார்த்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் அவர் விளையாட முடியாது என்பதோடு அடுத்து எப்போது களமிறங்குவார் என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
வலது முன்கையில் அடிபட்ட அவர் தொடர்ந்து ஆடினாலும் பெவிலியன் சென்றவுடன் வலியால் துடித்துள்ளார். பிறகு ஸ்கேனில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அடுத்த 3 வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டியதுதான்.
பேட்டிங்கில் ஜான்சன் வர்ணனையாளர் அறைக் கண்ணாடியைப் பதம் பார்த்தார். ஜிம்பாப்வே வீரர் பன்யாங்கரா இவர் ஆஷஸ் தொடரில் வீசிய ஆக்ரோஷத்தைக் காண்பிக்கும் விதமாக ஜிம்பாப்பே வீரர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கொண்டு அணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
மிட்செல் ஜான்சனின் திருவிளையாடல்களை நிறுத்தப்போகும் அந்த பேட்ஸ்மென் யார்? என்பதே இப்போதைய கேள்வி
முக்கிய செய்திகள்
உலகம்
21 mins ago
சினிமா
33 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
கல்வி
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago