உலக பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவின் குவாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் ரட்ச னோக் இன்டனானை எதிர்த்து விளையாடினார். 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-16, 25-23 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
உலக பாட்மிண்டன் தொடரில் சிந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் இறுதி சுற்றில் சிந்து, ஜப்பானின் நோஸோமி ஒகு ஹராவை எதிர்த்து விளையாடு கிறார். ஆடவர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சமீர் வர்மா 21-12, 20-22, 17-21 என்ற செட் கணக்கில் போராடி சீனாவின் ஷி யுகியிடம் தோல்வியடைந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
36 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago