உலக மகளிர் குத்துச்சண்டை: மேரி கோம், மணீஷா வெற்றி

By செய்திப்பிரிவு

உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் கால் இறுதியில் விளையாட இந்திய வீராங்கனை கள் மேரி கோம், மணீஷா ஆகி யோர் தகுதி பெற்றனர்.

10-வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கால் இறுதிக்கு முந் தைய சுற்றில் இந்திய வீராங்கனை மணீஷா மவுன் 5-0 என்ற புள்ளி கள் கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை டினா சலமானை வீழ்த்தினார்.

48 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் அய் கெரிம் கெசென்னயேவாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறி னார்.

இதேபோல் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பனாமா வீராங்கனை அத்தினா பைலோனை வீழ்த்தினார்.

81 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை கச்சாரி பாக்யவதி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை இரினா-நிக்கோலேட்டா ஷோன்பெர்கரை வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்