சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி விஜய் சங்கரை ஏலம் எடுத்தது.
டிஎன்பிஎல் டி 20 தொடரின் 3-வது சீசன் வரும் ஜூலை 11-ம் தேதி தொடங்குகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. ஏலத்தின் முதல் சுற்றில் ஆல்ரவுண்டரான விஜய் சங்கரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தேர்வு செய்தது. கடந்த சீசனில் விஜய் சங்கர் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். அதேவேளையில் தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட் அணி வாஷிங்டன் சுந்தரை தக்கவைத்துக்கொண்டது.
கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கை ஐட்ரீம் காரைக்குடி காளை அணி ஏலம் எடுத்தது. விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இங்கிலாந்து தொடரில் விளையாட உள்ளதால் அவர்கள் டிஎன்பிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சேப்பாக் அணி கோப்பையை கைப்பற்ற உறுதுணையாக இருந்த ஆர்.சதீஷை டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. டெஸ்ட் போட்டி தொடக்க வீரர்களான முரளி விஜய், அபினவ் முகுந்த் ஆகியோர் முறையே ரூபி திருச்சி வாரியர்ஸாலும், லைகா கோவை கிங்ஸ் அணியாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரவிச்சந்திரன் அஸ்வின் இம்முறையும் திண்டுக்கல் அணிக்காகவே களமிறங்குகிறார்.
சேப்பாக் அணி விவரம்:
அலெக்சாண்டர், கார்த்திக், சசிதேவ், விஜய் சங்கர், கோபிநாத், முருகன் அஸ்வின், ஹரீஷ் குமார், கங்கா ஸ்ரீதர் ராஜீ, சன்னிகுமார் சிங், சம்ரூத் பாட், அருண்குமார், விஷால், ராகுல், சித்தார்த், அருண், ஆரிஃப், சிவக்குமார், மானவ் பாரக், சாய் சுதர்ஷன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago