சனிக்கிழமை (நாளை) ஆர்சிபி அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டியில் சென்னையின் பலவீனமான பந்து வீச்சை மீண்டுமொரு முறை சோதிக்க ஆர்சிபி அணியில் ஆடுகிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ், குவிண்டன் டி காக் ஆடவில்லை என்று பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
“ஏபிடி ஃபிட் ஆகி விட்டார், குவிண்டன் டி காக் ஊருக்குப் போய்விட்டுத் திரும்புவார் அதனால் அவர் நாளை ஆட மாட்டார்.
கொலின் டி கிராண்ட் ஹோம் கடந்த போட்டியில் நன்றாக ஆடினார் 20+ ரன்கள் வெற்றிக்கு உதவியது. மந்தீப் சிங் சிராக ஆடுகிறார். டாப் ஆர்டரில் 4 பேட்ஸ்மென்கள் பொதுவாகவே நன்றாக ஆடுகின்றனர்.
மும்பைக்கு எதிராக எங்கள் அணிச்சேர்க்கை நன்றாக அமைந்தது, டிம் சவுதி தனிச்சிறப்பாக வீசினார். சிராஜும் முன்னேறி வருகிறார், சாஹல், உமேஷ் யாதவ் எப்பவும் போல் சிக்கனமாக வீசுகின்றனர்.
நாளை பந்து வீச்சுதான் வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கும்” என்றார் வெட்டோரி.
அன்று சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக டிவில்லியர்ஸ் 8 சிக்சர்களுடன் பவுலிங்கை எட்டுதிக்கும் சிதறடித்தார், 205 ரன்கள் அடித்தும் தோனி, ராயுடு அதிரடியில் அன்று ஆர்சிபி தோற்றது. காரணம் பவன் நெகிக்கு பவுலிங் கொடுத்து தோனியை செட்டில் ஆகவிட்டு தவறிழைத்தார் விராட் கோலி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
42 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago