இரு பெண்களுடன் திருமணமா?: ரொனால்டினோ மறுப்பு

By செய்திப்பிரிவு

ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக வெளியான தகவலை பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ மறுத்துள்ளார்.

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ கடந்த 2013-ம் ஆண்டு பிரிஸிலா என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதன் பின்னர் 2016-ம் ஆண்டு பீட்ரிஸ் சவுசா என்பவருடனும் ரொனால்டினோவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் ரொனால்டினோ ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், இந்த திருமணமானது ரொனால்டினோவின் வீட்டில் குடும்ப சந்திப்பு என்ற பெயரில் நடைபெற இருப்பதாகவும் பிரேசிலில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் அந்த இரு இளம் பெண்களும் ரொனால்டினோவுடன் கடந்த டிசம்பர் மாதம் முதலே இணைந்தே வசிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. பிரேசில் நாட்டில் இருதாரம் என்பது சட்டப்படி குற்றமாகும். இதை மீறி செயல்பட்டால் 6 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். இந்நிலையில் இந்த திருமண செய்தியை ரொனால்டினோ மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “இந்த உலகம் முழுவதிலும் இருந்து என்னை அழைக்கிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. இதுதொடர்பான வெளியான செய்தி மிகப்பெரிய பொய்யாகும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

38 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

46 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

31 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்