எங்கள் கதை இப்படி... அவர்கள் கதை அப்படி: தோல்விக்குப் பிறகு விராட் கோலி

By செய்திப்பிரிவு

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணிக்கு எவ்வளவோ வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார், ஆனால் ஆர்சிபி கேப்டனாக 147 ரன்களை கூட விரட்டல் மன்னனால் விரட்ட முடியவில்லை, இது போன்று எத்தனையோ தோல்விகள் ஐபிஎல்-ல் சந்தித்து வருகிறார் விராட் கோலி.

இந்நிலையில் நேற்றும் தோற்க முடியாத ஒரு போட்டியில் ஆர்சிபி அணி சன் ரைசர்ஸின் கட்டுக்கோப்புக்கு இரையாகி இலையுதிர்ந்தது.

ஆட்டம் முடிந்து விரக்தியின் பிடியில் இருந்த விராட் கோலி கூறியதாவது:

அப்படித்தான் இந்த ஆட்டம் சென்றது. சரியல்ல, தரநிலைக்கு உகந்ததாக இல்லை. தோற்கத் தகுதியானவர்கள்தான் நாங்கள், போதுமான அளவில் முனைப்புடன் ஆடவில்லை.

நாங்கள் தேர்வு செய்த ஷாட்கள் ஆட்டத்தின் அந்தக் கட்டத்தில் தேவையற்றது.  மந்தீப் சிங், கொலின் டிகிராண்ட்ஹோம் நின்றால் வெற்றி வாய்ப்பு உண்டு என்று ஆடினர்.  இந்த சீசனில் எங்கள் கதை இப்படி.

பீல்டிங்கில் நன்றாக செயல்பட்டோம். அழுத்தமான தருணங்களில் சிறப்பாக ஆடும் வீரர்கள் சன் ரைசர்ஸில் உள்ளனர்.  இந்த சீசனில் அவர்கள் கதை அப்படி.

அவர்கள் தங்கள் வலுவையும் அறிந்துள்ளனர், வரம்புகளையும் அறிந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் வெற்றிகரமாகத் திகழ்கின்றனர். சன் ரைசர்ஸ் பவுலிங்கில் மிகச்சிறந்த அணியாக உள்ளது, ஒட்டுமொத்தமாக கிங்ஸ் லெவன் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைக் குறிப்பிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

வெற்றிக் கொடி

25 mins ago

இந்தியா

28 mins ago

வேலை வாய்ப்பு

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்