காமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கின. முதல் நாளில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து 10 நாட்களாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற போட்டிகளின்போது இந்திய வீரர், வீராங்கனைகள் 8 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர். மேலும் 5 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மகளிருக்கான பேட்மிண்டன் இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து மோதினர். இதில் 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி நேவால் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த பி.வி. சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
க்ரைம்
33 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago