உலக வில்வித்தை போட்டி: இந்திய அணிக்கு 2 பதக்கம்

By செய்திப்பிரிவு

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலக வில்வித்தையின் 4-ம் நிலை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரீகர்வ் அணிகள் ஆடவர் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ், துஷார் ஷெல்கே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் ஆண்ட்ரெஸ் டெமினோ, யுன் சான்செஸ், பாப்லோ அச்சா ஆகியோரை உள்ளடக்கிய ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

முன்னதாக இந்திய ஆடவர் அணி அரை இறுதி சுற்றில் 0-6 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி அடைந்து தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருந்தது.

ரீகர்வ் அணிகள் மகளிர் பிரிவில் அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 5-4 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்