தேசிய ஜூனியர் போட்டி தமிழக கபடி அணிக்கு வடுவூர் வீரர் தேர்வு

By செய்திப்பிரிவு

தேசிய ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்த வீரர் ஜெயப்பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, 32 மாவட்டங்களுக்கு இடையிலான கபடி போட்டி சேலம் மாவட்டம் சங்ககிரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், திருவாரூர் மாவட்ட அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜெயப்பிரகாஷ், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் பங்கேற்ற அணிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய மேலும் 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழக அணி வீரர்கள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற உள்ள தேசிய ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்படுகின்றனர். இந்நிலையில் தமிழக அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு திருவாரூர் மாவட்ட கபடி கழகச் செயலாளர் ராஜராஜேந்திரன், தலைவர் கமலக்கண்ணன், கவுரவத் தலைவர் சீலன், இணைச் செயலாளர் தேவா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்