ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, 6-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் இன்டனான் ரட்சனோக்குடன் மோதினார். சுமார் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சிந்து, முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் சூ யிங்கை எதிர்கொள்கிறார். அவர் அரை இறுதியில் 21-9, 18-21, 21-7 என்ற செட் கணக்கில் கொரியாவின் சன் ஜி ஹைனை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
36 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
59 mins ago
தொழில்நுட்பம்
41 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago