1993-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த சிலி அணி, இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் களம் இறங்குகிறது. வரும் 8-ம் தேதி சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள தங்கள் முதல் போட்டியில், இங்கிலாந்தை எதிர்த்து சிலி ஆடவுள்ளது. இந்நிலையில் போட்டிகளின்போது கவனம் சிதறாமல் இருப்பதற்காக, சிலி வீரர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. “இந்த கட்டுப்பாடு விஷயத்தில் அணியின் பயிற்சியாளர் மிகவும் உறுதியாக இருக்கிறார். இதனால் சமூக வலைதளங்களில் வீரர்களின் கவனம் சிதறி பயிற்சி பாதிக்கப்படாமல் இருக்கும் என்று பயிற்சியாளர் நம்புகிறார்” என்று சிலி அணியின் நிர்வாகிகளில் ஒருவர் நிருபர்களிடம் கூறினார்.
உலகக் கோப்பைக்கு வீரர்களை தயார்படுத்த கால்பந்து பயிற்சியுடன் சேர்த்து ஹட யோகா பயிற்சி அளிப்பது, ‘சக் தே இந்தியா’ போன்ற விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் படங்களைப் பார்க்க வைப்பது போன்ற விஷயங்களையும் சிலி அணியின் பயிற்சியாளர் ஹெர்னான் கபுடோ செய்து வருகிறார். -பிடிஐ
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
வணிகம்
12 mins ago
இந்தியா
15 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
29 mins ago
ஓடிடி களம்
36 mins ago
விளையாட்டு
41 mins ago
க்ரைம்
46 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
இந்தியா
1 hour ago