இத்தாலியில் உள்ள இமோலாவில் பாஸ் ஜி.பி.கார் பந்தயம் நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த கார் பந்தயத்தில் 19 வயதான சென்னை வீரர் மஹாவீர் ரகுநாதன் 7 போட்டிகளில் 263 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதற்கு முன் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் 1994-ம் ஆண்டு பிரிட்டிஷ் பார்முலா போர்டு பந்தயத்திலும், பார்முலா ஆசிய சீரியஸ் போட்டியில் 1996ம் ஆண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்து இந்திய வீரர் கருண் சந்தோக் பார்முலா கார் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மஹாவீர் ரகுநாதன் கூறும் போது, “இந்த வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. எனது தன்னம்பிக்கையை மேலும் ஊக்கப்படுத்தி உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
க்ரைம்
18 mins ago
தமிழகம்
15 mins ago
கல்வி
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
2 hours ago