கேதார் ஜாதவுக்கு ஏன் பவுலிங் கொடுக்கவில்லை? - விராட் கோலி விளக்கம்

By செய்திப்பிரிவு

விராட் கோலி தனது 200வது ஒருநாள் போட்டியில் நேற்று 31-வது சதம் எடுத்து அணியை நல்ல ஸ்கோருக்கு முன்னேற்றினாலும், மற்றவர்களிடமிருந்து ஒரு அரைசதம் கூட வராத நிலையில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

தோல்விக்கான காரணம் குறித்து ஆட்டம் முடிந்த பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

தொடக்கத்திலேயே நியூஸிலாந்து அணி எங்களை நெருக்கடிக்குள்ளாக்கியதே காரணம். 275 நல்ல ஸ்கோர் என்றே கருதினோம், ஆனால் டாம் லேதம், ராஸ் டெய்லர் பிரமாதம். அங்கொன்றும் இங்கொன்றும் ஓரிரு ரன் அவுட் வாய்ப்புகளைத் தவிர வேறு வாய்ப்புகளை இவர்கள் வழங்கவில்லை.

மேலும் 200 ரன் கூட்டணி அமைத்தால் அந்த அணியே வெற்றிக்குத் தகுதி பெற்ற அணியாகும். கடைசி 13-14 ஓவர்களில் 20-30 ரன்கள் குறைவாக எடுத்தோம். இன்னும் ஓரிருவர் நன்றாக பேட்டிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், நல்ல பேட்டிங்கை எதிர்நோக்குகிறோம். இன்னும் ஓரிருவர் ரன்கள் எடுத்திருந்தால் 30-40 ரன்கள் கூடுதலாக வந்திருக்கும்.

நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் நம் ஸ்பின்னர்களை சரியாகக் கையாண்டனர். டாம் லேதம், ராஸ் டெய்லரைப் பாராட்டுகிறேன். அதே போல் டிரெண்ட் போல்ட் பந்து வீச்சில் சிறப்பாக வீசினார்.

முதல் நிலை ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அளவுக்கு பிட்சில் பந்துகள் திரும்பும் நிலையே காணப்பட்டது. நியூஸிலாந்தின் பின் கள வீரர்கள் இறங்கியிருந்தால் கேதார் ஜாதவ்வை பயன்படுத்தியிருப்பேன். ஹர்திக் நன்றாக வீசியதால் கேதாரை கொண்டு வர வேண்டிய தேவையை உணரவில்லை.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்