ஸ்ரீரங்கம் கோயில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்பில் பங்கேற்க அழைப்பு 

By கல்யாணசுந்தரம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் சார்பில், குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து இன்று (ஜூன் 11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் சார்பில், இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் ஜூன் 5-ம் தேதி தொடங்கப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ள இந்த ஆன்மிக வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், குழந்தையின் பெயர், வயது, பெற்றோர் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் (வாட்ஸ் அப் வசதியுடன்) ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு avsrirangamtemple@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

ஜூன்.12-ம் தேதி நடைபெறவுள்ள ஆன்மிக வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் Video call link: https://meet.google.com/hqw-nvdg-sog என்ற லிங்க்கை பயன்படுத்தி கலந்துகொள்ளலாம்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்