திருச்சி திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அரச முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவையொட்டி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிப்.19-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலையில் வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
பிப்.20-ம் தேதி காலை காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, மாலையில் முதல் கால யாகபூஜை நடைபெற்றது. பிப்.21-ம் தேதி காலை இரண்டாம் கால யாகபூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன.
குடமுழுக்கு தினமான இன்று (பிப். 22) காலை நான்காம் கால யாகபூஜைகள் நடைபெற்று, யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு அரசு முத்து மாரியம்மன் விமானம் மற்றும் செல்வவிநாயகர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளின் சன்னதிகளிலும் குடமுழுக்கு நடைபெற்றது.
ஆஞ்சநேயர் சன்னதி கோபுர மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, விழாக்குழுவைச் சேர்ந்த நாகராஜன், நாகு, செந்தில்நாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 mins ago
ஜோதிடம்
19 mins ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago