அஷ்டமியில் பயமெல்லாம் போக்கும் பைரவரை வழிபடுங்கள். பைரவரைப் பிரார்த்தனை செய்து, தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள். தோஷமெல்லாம் விலகும்.
கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு. காலபைரவரை வழிபடுவது மிகப்பெரிய மனோபலத்தைக் கொடுக்கவல்லது. பயத்தையும் திருஷ்டியையும் போக்கவல்லது என்கிறார்கள்.
சிவாலயங்களில், கோஷ்டத்தைச் சுற்றி வரும் போது, நிறைவு செய்யுமிடத்தில், பைரவரை தரிசிக்கலாம். ஊருக்கும் ஆலயத்துக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் பைரவர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அதேபோல, பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. செவ்வரளி மலர் கொண்டு அலங்கரிக்கலாம். தயிர்சாதம் நைவேத்தியம் செய்தும் பைரவரை வணங்கலாம்.
பைரவரில் பல வடிவங்கள் உள்ளன. இதில் சொர்ணாகர்ஷண பைரவரை தரிசிப்பதும் அவரை வழிபடுவதும் மும்மடங்கு பலன்களைத் தரும். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்யும்.
பைரவருக்கு உகந்தது அஷ்டமி. மாதந்தோறும் வருகிற அஷ்டமியில், பைரவரை வணங்குவது விசேஷம். தேய்பிறை அஷ்டமி நாளில், அதாவது பெளர்ணமிக்குப் பிறகு வருகிற எட்டாம் நாள் தேய்பிறை அஷ்டமி நாளில், காலபைரவரை வழிபடுவது மகத்தான பலன்களை வாரி வழங்கும்.
அதேபோல், பொதுவாகவே அஷ்டமியில் பைரவ வழிபாடு செய்யலாம். வீட்டில் விளக்கேற்றி பைரவரை வணங்குங்கள். நாளைய தினம் புதன்கிழமை, 26ம் தேதி அஷ்டமி. நாளைய தினம், பைரவரை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பைரவரை நினைத்து, தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள். வீட்டின் திருஷ்டியெல்லாம் கழியும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago