வார ராசி பலன் 21-05-2015 முதல் 27-05-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். பிள்ளைகளால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். அரசியல் ஈடுபாடு அளவோடு நலம் தரும்.

வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும். 2-ல் சூரியனும் செவ்வாயும் அமர்ந்து சனியின் பார்வையைப் பெறுவதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தொழிலில் அதிக கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 22, 23, 27

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 4, 5, 6. ‎

பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2-லும், கேது 11-லும் உலவுவது சிறப்பு. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். முக வசீகரம் ஏற்படும். பேச்சில் இனிமை கூடும். முக்கியமான எண்ணங்கள் சில இப்போது நிறைவேறும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும்.

உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு பயன்படும். நல்லவர் அல்லாதவர்களிடம் விலகி இருப்பது நல்லது. எதிலும் பதற்றம் கூடாது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலதிபர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்ய இப்போது உகந்ததாகாது. பிள்ளைகள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். கலைத் துறையினருக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 22, 23, 27 சுமாரானவை.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: குரு, ராகுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவதால் மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப நலம் சிறக்கும்.

பேச்சில் திறமை வெளிப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கடல் வாணிபத்தில் ஆதாயம் கிடைக்கும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தந்தை, உடன்பிறந்தவர்கள், நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 22, 23, 27.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, பொன் நிறம், நீலம்.

எண்கள்: 3, 6, 7, 8.

பரிகாரம்: மகாவிஷ்ணு, முருகனை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 11-ல் சூரியனும் செவ்வாயும் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

இன்ஜினீயர்களது நோக்கம் நிறைவேறும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். கலைத் துறை ஊக்கம் தரும். பெண்களின் நிலை உயரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்களுக்காகவும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 22, 23, 27.

திசைகள்: தெற்கு, கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, புகை நிறம், இளநீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6, 9.

பரிகாரம்: சனி, கேதுவுக்குப் பிரீதி செய்யவும். ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், புதனும், 11-ல் சுக்கிரனும் உலவுவதால் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். ஊதிய உயர்வு பெறவும் சந்தர்ப்பம் கனிந்துவரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும்.

கணிதம், எழுத்து, பத்திரிகை, பொறியியல், அரசாங்கம், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். சுப காரியங்களுக்காகவும், பிள்ளைகள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்ய வேண்டிவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். மேலதிகாரிகள் போற்றுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 22, 23, 27.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 9.

பரிகாரம்: சனி, ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குறிப்பிட்ட கிரகங்களுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 9-ல் புதனும், 10-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பு. சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். தொழில் விருத்தி அடையும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு வருவாய் அதிகமாகும். நிலபுலங்கள் லாபம் தரும்.

கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். பெரியவர்களும், தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பொதுநலப் பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகமாகும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று கூடும். சிக்கனம் தேவை. வார முன்பகுதியில் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 22, 23.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8.

பரிகாரம்: ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வரவும். துர்க்கையம்மன், விநாயகரை வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

17 mins ago

க்ரைம்

23 mins ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்