நிகழும் ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 17-ம் தேதி சனிக்கிழமை(02.09.2017) சுக்ல பட்சத்து ஏகாதசி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம் நிரம்பி, ஜீவனம் மறைந்த சித்தயோகத்தில், சூரியன் ஹோரையில் இரண்டாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் கோழி ஊன் கொள்ளும் நேரத்திலும், தட்சிணாயனப் புண்ய கால வர்ஷருதுவில் காலை மணி 9.25-க்கு துலாம் லக்னத்தில் வேதாந்த ஞான கிரகமான வியாழபகவான் எனும் குருபகவான் கன்னி ராசியிலிருந்து சர வீடான துலாம் ராசிக்குள் சென்று அமர்கிறார். 02.10.2018 வரை இங்கே அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.
களத்திரக்காரகன் சுக்ரன் வீடான துலாத்தில் அமர்வதால் சொந்த வீடு, வாகனம் வாங்குவதை வாழ்வின் குறிக்கோளாக மக்கள் நினைப்பார்கள். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகமாகும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். பாரம்பரிய பண்பாடு கலாச்சாரங்களிலிருந்து பலர் நழுவிச் செல்வார்கள். சினிமா, சின்னத்திரை துறைகளில் அடிக்கடி குழப்பங்களும்,வேலைநிறுத்தங்களும் நடைபெறும், புகழ்பெற்ற முன்னணி சினிமா நிறுவனங்கள், வங்கிகள் மூடப்படும். வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும். பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மருத்துவத் துறையினர் சாதிப்பார்கள். மலை, காடு செழிக்கும். வனவிலங்குகள் பாதுகாக்கப்படும்.
அவரவர் ராசியின் முழுமையான குரு பெயர்ச்சி பலன்களைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசிகளின் பெயர்களை க்ளிக் செய்யவும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
தமிழகம்
22 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago