கடகம்: ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

By வேங்கடசுப்பிரமணியன்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்பவர்களே! உங்களுக்கு இராகுவும், கேதுவும் 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டத்தில் என்ன தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் உட்கார்ந்து கொண்டு காரியத்தடைகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுதடுமாறிக் கொண்டிருந்த உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். சிலர் உங்களை அவமதித்து பேசினாலும் அதற்குத் தக்கபதிலடி தருவீர்கள்.

குடும்பத்தில் சின்ன சின்ன ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இருந்தாலும் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பணவரவு அதிகரிக்கும். என்றாலும் செலவினங்கள் அதற்குத் தகுந்தாற் போல் இருக்கும். ராகு ராசிக்குள்ளேயே நுழைவதால் ஆராய்கத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். இரவுநேரத்தில் வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் கோவில் திருவிழாவில் முதல் மரியாதைக் கிடைக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். இளைய சகோதரங்கள் உதவுவார்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள்.

5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி வழி உறவினர்களை அனுசரித்துப் போவது நல்லது. கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கப்பாருங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வரும்.

குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் புது வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிதுர்வழி சொத்துகளை பெறுவதில் இருந்த சிக்கல்கள் விலகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருந்துக் கொண்டேயிருக்கும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். நியாயத்தை எடுத்துச் சொல்லப் போய் உங்கள் பெயர் கெட வாய்ப்பிருக்கிறது. சக ஊழியர்களில் இடமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும். சிலர் அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். உங்களின் தோற்றப்பொலிவை கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காக சிலவற்றை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். 7&ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்&மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதை தவிர்க்கவும். சொத்துப் பிரச்சனை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்

27.7.2017 முதல் 29.11.2017 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் மழலை பாக்யம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். புது பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கு சாதகமாகும்.

30.11.2017 முதல் 06.08.2018 வரை சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சொந்த&பந்தங்களால் ஆதாயமடைவீர்கள்.

7.08.2018 முதல் 13.2.2019 வரை சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் அமைதி நிலவும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வேற்றுமொழிக்காரர்களால் பயனடைவீர்கள். ஷேர் லாபம் தரும். அவசர முடிவுகள் வேண்டாமே. மற்றவர்களுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

இந்த இராகு கேது மாற்றம் உங்களை சில நேரங்களில் சிரமப்படுத்தினாலும், விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: பௌர்ணமி திதி நாட்களில் புற்றுடன் அருள்பாலிக்கும் அம்மன் கோவிலில் மஞ்சள் து£ள் தந்து வணங்குங்கள். வாழைமரக் கன்று நட்டு பராமரியுங்கள். ஆரோக்யம், அழகு கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

சுற்றுலா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்