வார ராசிபலன் செப்டம்பர் 20 முதல் 26-ஆம் தேதி வரை (துலாம் முதல் மீனம் வரை)

By பெருங்குளம் ராமகிருஷ்ணன்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்பத்தினர் அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். ராசியாதிபதி சுக்கிரன் ராசியிலேயே குருவுடன் சஞ்சாரம் செய்வதால் சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பேச்சில் கவனம் அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு சில சஞ்சலங்கள் ஏற்படலாம்.

முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் வரலாம். தீர ஆலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். பெண்களுக்கு பணப்பிரச்சனைகள் தீரும். கலைத் துறையினருக்கு, ஆரோக்கியக் குறைபாடுகளால்  வேலையைத் தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம்.அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி  யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் உதவி செய்வார்கள்.நீங்கள் பாடங்களைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: அம்பாளுக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்ப பிரச்சினை தீரும். சுபச்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம்.  தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொருவராக தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பதனால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். சம்பளபாக்கி இருந்தவர்களுக்கு சம்பளம் வந்து சேரும். பெண்களுக்கு, நிம்மதி கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மாணவர்களுக்கு இது அனுகூலமான வாரமாகும். உதவித் தொகை கிடைக்கும். பெரியவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தேவையானதை வாங்கித் தருவார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்:  நடராஜப் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் தொழிலில் அபரிமிதமான வெற்றிகளை எதிர்பார்க்கலாம். எடுக்கும் முடிவுகள் லாபம் தரும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். சம்பள உயர்வு கிடைக்கும். பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். சொத்து வாங்க முடிவு செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் கேது பகவான் சேர்க்கை சில தொந்தரவுகளைக் கொடுத்தாலும் ராசிநாதனின் சஞ்சாரம் அனுகூலத்தைத் தரும்.

சொல்ல விரும்புவதைத் தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த சங்கடங்கள் குறையும். கலைத் துறையினருக்கு, தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் ஆசிரியர் உறவு சுமுகமாக இருக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பொறுமை காப்பதன் மூலம் நல்ல பலன்களையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்:  பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்பத்தில் மனக்கசப்புக்கான சூழ்நிலை வரலாம். பரஸ்பரம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.திருமணம் தொடர்பான பேச்சுகள் வரும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் விரிவாக்கத்துக்கான எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வேலைகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். பெண்களுக்கு, வரவேண்டிய பணம் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். அரசியல்வாதிகள், தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான காலமாக இருக்கும். உபகரணங்கள், உதவித்தொகை என அனைத்தும் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும்

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். வழக்குகள் சாதகமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் லாபம் காண்பார்கள். கூட்டாளிகளுடன் மனக்கசப்பு அகலும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உடலில் இருந்த பிரச்சினைகள் குறையும். சுறுசுறுப்புடன் வேலைகளை முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பெண்கள் சிறிது விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். கலைத் துறையினருக்கு, சலிப்பு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும். மாணவர்களுக்கு, தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை

எண்கள்: 2, 6

பரிகாரம்:  சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் புதிய நண்பர்களின் சேர்க்கையும் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணிகள் தடையின்றி நடக்கும்.  புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும்.பொறுமையைக் கடைபிடியுங்கள். உத்தியோகஸ்தர்கள் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டிய சூழல் காணப்படும். வார இறுதியில் பணிச்சுமை குறைந்து நிம்மதி அடைவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். கலைத் துறையினருக்கு, நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் குழப்பங்கள் தேடிவர வாய்ப்பு இருக்கிறது. அரசியல்வாதிகள், யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்துக்கு இடம்தர வேண்டாம். மாணவர்களுக்கு, வெளியில் செல்லும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்