சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை திருப்பதி கோயில் மூடல்

By செய்திப்பிரிவு

திருமலை: சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி அதிகாலை 1.05 முதல் 2.22 வரை நிகழ உள்ளது.

இதனையொட்டி, முந்தைய நாளான 28-ம் தேதி இரவு 7.05 முதல் 29-ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சுமார் 8 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆதலால் 29-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெறும். சந்திர கிரகணத்தால் 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் அன்றைய மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

13 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்