சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கும்பம்

By வேங்கடசுப்பிரமணியன்

திரில் இருப்பவர் பேசத் தொடங்கும்போதே அடுத்ததாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிவதில் கில்லாடி நீங்கள்தான்.

இதுவரை சனிபகவான் தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் நின்று கொண்டு உங்களை எந்த வேலையையும் மனநிறைவுடன் செய்ய விடாமல் தடுத்தாரே! இப்பொழுது 19.12.2017 முதல் 26.12.2020 முடிய லாப வீட்டில் அமர்ந்து உங்களை ஆட்சி செய்யப் போகிறார். உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் திருப்பித் தருவார்கள். பங்குச் சந்தை மூலமும் லாபம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். அனுபவபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள்.

மூத்த சகோதரர் வகையில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்தை மாற்றி புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களைஎல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர்கள், உறவினர்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். செறிமானக் கோளாறு, நரம்பு பிரச்சினைகள் வந்து நீங்கும்.

சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். சில நாட்கள் தூக்கமில்லாமல் போகும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

சாலையைக் கடக்கும் போது கவனம் தேவை. 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். ஊர்ப் பொதுக்காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019, 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் மருத்துவச் செலவுகள் வந்து போகும். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019, 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் எடுத்த காரியம் உடனடியாக முடியும்.

மாணவ, மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மதிப்பெண் கூடும். வகுப்பறையில் சக மாணவர்கள் வியக்கும்படி ஆசிரியரைக் கேள்வி கேட்பீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்றுமொழி பேசுபவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புது வேலையும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களின் திருமண விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தலைமையிடம் செல்வாக்குக் கூடும். போராட்டங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்துக்குஆதரவு பெருகும்.

கலைத்துறையினரே! விமர்சனங்கள், கிசுகிசுக்களிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும். வருமானம் உயரும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வருமானம் உயரும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை அழகுப்படுத்தி, நவீனமாக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெற்று புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி சிங்கத்துக்கு வாலாக இல்லாமல், நரிக்கு தலையாக இருந்து தன்மானத்துடன் வாழ வைக்கும்.

பரிகாரம்: தேனி மாவட்டம், முத்துதேவன்பட்டி எனும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு நாககாளி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் பாலாபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். வெற்றி கிட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்