சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: துலாம்

By வேங்கடசுப்பிரமணியன்

ரப் பார்வையால் அனைவரையும் தன் வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட நீங்கள், எல்லோரின் இயக்கங்களையும் எடைபோடுவதில் வல்லவர்கள். இதுவரை பாதச்சனியாக இருந்து உங்களை முடக்கிப் போட்ட சனிபகவான் 19.12.2017 முதல் 26.12.2020 வரை யோகம் தரும் வீடான 3-ம் வீட்டில் அமர்ந்து, வாழ்வில் திடீர் யோகங்களையும், அந்தஸ்தையும் வாரிவழங்க உள்ளார்.

குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும்.

அவருடனான மோதல்களும் விலகும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் பிரபலங்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். ஊர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு அவற்றை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும் அளவுக்கு நடந்து கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

ஷேர் மூலமாக பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். கோட்டைவிட்ட பழைய சந்தர்ப்பங்களைத் திரும்பப் பெற்று சாதுர்யமாக முடிப்பீர்கள். உங்களின் நீண்டகாலக் கனவான வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும். 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019, 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள்.

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் மனைவி வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அவர் வழி உறவுகளால் ஆதாயமும் கிடைக்கும். 10.5.2019 முதல் 11.8.2019, 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் வெளிவட்டாரத்தில் உள்ளவர்களிடம் கவனமாக பழகுங்கள். பேச்சையும் குறைத்துக்கொள்ளுங்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகிச் செல்வதால் இக்காலக்கட்டத்தில் அரசாங்க விஷயங்கள் உடனடியாக முடியும்.

மாணவ, மாணவிகளே! பொது அறிவுத் திறன் வளரும். மதிப்பெண் கூடும். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணர்வர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். இசை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான கடிதம் வரும்.

அரசியல்வாதிகளே! பதவிகள் தேடி வரும். கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குக் கூடும். எதிர்கட்சியினர் உதவுவார்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.

கலைத்துறையினரே! பரபரப்பாக காணப்படுவீர்கள். யதார்த்தமான படைப்புகளால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கற்பனைத் திறன் வளரும்.

வியாபாரிகளே! கூடுதல் லாபம் கிடைக்கும். அவ்வப்போது மாறிவரும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது.

உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். அவர்களின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல பொறுப்பில் அமர வாய்ப்பிருக்கிறது. மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

இந்தச் சனி மாற்றம் விரக்தி, வேதனைகளிலிருந்து விடுவிப்பதுடன் அதிகாரம், ஐஸ்வரியங்களில் திளைக்க வைக்கும்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம், புதுப்பாளையம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு இரட்டைப் பிள்ளையாரை சங்கடஹரசதுர்த்தி திதி நாளில் சென்று தேங்காய் மாலை அல்லது கொழுக்கட்டை அர்ச்சனை செய்து வணங்குங்கள். சுபிட்சம் பெருகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்