ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா; இவ்வளவு மூர்த்திகள் எதற்கு சுவாமி?- காஞ்சி மகானின் அருளுரை

By வி. ராம்ஜி

ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு மூர்த்திகள் எதற்கு சுவாமி? என்று காஞ்சி மகாபெரியவரிடம் கேட்டார் ஒருவர்.

அதற்கு மகா பெரியவர், இப்படிப் பதிலளித்தார்.

நாம் சாப்பிடுகிறோம். வயிறு நிரம்புவதற்காகத்தானே சாப்பிடுகிறோம். எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை மாத்திரம் சாப்பிட்டால், வயிறு நிரம்பி விடுகிறது. அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்வது?

வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி. ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதார்த்ததிலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து அவரவர் சாப்பிடுகிறார். அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள். அப்படியே தியானம் பண்ணுகிறது என்றாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன என்று மகா பெரியவர் விளக்கம் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

6 mins ago

இந்தியா

6 mins ago

விளையாட்டு

15 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கார்ட்டூன்

5 hours ago

மேலும்