கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும்.
அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
தால் மக்னி
என்னென்ன தேவை?
கறுப்பு உளுந்து – அரை கப்
வெங்காயம் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தக்காளி – 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பிரஷ் கிரீம் - 3 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
சீரகம் - சிறிதளவு
வெண்ணெய் - 1டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
உளுந்தை எட்டு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். ஊறியதும் குக்கரில் போட்டு எட்டு விசில் விட்டு இறக்குங்கள். வாணலியில் வெண்ணெய், எண்ணெய் இரண்டையும் போட்டுச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். குக்கரில் வைத்துள்ள உளுந்தைச் சேர்த்துக் கிளறி 15 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். வெண்ணெய், பிரஷ் கிரீம் சேர்த்து இறக்குங்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஓடிடி களம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago