என்னென்ன தேவை?
ஆரஞ்சு - ஒரு கிலோ
சர்க்கரை - அரை கிலோ
தண்ணீர் - அரை லிட்டர்
சிட்ரிக் அமிலம் - கால் டீஸ்பூன்
கே.எம்.எஸ். பவுடர் - கால் டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் - சில துளிகள்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். அதில் சர்க்கரை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடம் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் இறக்கவைத்து ஆறவிடுங்கள். ஆறியதும் சிட்ரிக் அமிலம் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். ஆரஞ்சு பழங்களைப் பிழிந்து சாறெடுக்கவும். வடிகட்டிய சாற்றை, சர்க்கரைக் கலவையில் சேர்த்துக் கலக்குங்கள்.
அதனுடன் கே.எம்.எஸ். பவுடர், ஆரஞ்சு கலர் சேர்த்துக் கலந்து, உலர்ந்த பாட்டிலில் அடைத்துவையுங்கள். இதை மூன்று முதல் நான்கு மணி நேரம்வரை அறை வெப்பநிலையில் வைத்திருங்கள். பிறகு ஃபிரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது சோடா அல்லது குளிர்ந்த நீர் சேர்த்துப் பருகலாம். ஒவ்வொரு முறையும் நன்றாகக் குலுக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
32 mins ago
கல்வி
46 mins ago
சினிமா
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
58 mins ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
இந்தியா
2 hours ago