திருமண விருந்து: தால் பாட்டியா (ராஜஸ்தான்)

By ப்ரதிமா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்

நெய் – 2 டீஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

ஓமம் – 1 டீஸ்பூன்

நெய் – முக்கால் கப்

தால் செய்ய: துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மசூர் பருப்பு – தலா கால் கப்உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2

மிளகாய்த் தூள், கரம் மசாலா, தனியாத் தூள், சீரகத் தூள் – தலா 2 டீஸ்பூன்

நெய் – 4 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

எப்படிச் செய்வது?

பிரஷர் பேனில் நெய்யை ஊற்றி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய்த் தூள், கரம் மசாலா, தனியா, சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பருப்பு வகைகளையும் மஞ்சள் தூளையும் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடுங்கள். சூடு குறைந்ததும் பிரஷர் பேனைத் திறந்து கலவையில் உப்பையும் கொத்தமல்லித் தழையையும் சேர்த்துக் கலந்துவையுங்கள்.

கோதுமை மாவுடன் உப்பு, இரண்டு டீஸ்பூன் நெய், ஓமம் ஆகியவற்றைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். அவற்றைச் சூடான தவாவில் வைத்து மூடி, குறைந்த தீயில் வேகவிடுங்கள். மைக்ரோவேவ் அவன் இருந்தால் அதிலும் வைக்கலாம். பாட்டியா வெந்ததும் சூடான நெய்யில் ஊறவையுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, தாலுடன் சேர்த்துப் பரிமாறுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

44 mins ago

ஜோதிடம்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்